என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் பலி
- காஞ்சனா முத்து சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார்.
- நரியூத்து விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் காஞ்சனா முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் அக்னி மாடன். இவரது மகன் காஞ்சனா முத்து (வயது 27). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காஞ்சனா முத்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மானூரை அடுத்த நரியூத்து விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காஞ்சனாமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காஞ்சனாமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






