search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் காமிராக்கள் பொருத்தம்
    X

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் காமிராக்கள் பொருத்தம்

    • வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேனாடு கம்பை அறக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் பணியாற்றி வரும் நிஷாந்த் என்பவரது 4 வயது மகளை புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வனத்து றையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டிக்கு அனுப் பினர்.தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட வன அலுவலர் சச்சின் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், சிறுத்தை தாக்கி குழந்தை இறந்த அரக்காடு பகுதியில் 2 இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×