search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே வீடுபுகுந்து துணிகர கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம். 

    திட்டக்குடி அருகே வீடுபுகுந்து துணிகர கொள்ளை

    • நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நாவலூர் கிராமத்தில் பழைய காலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி( 52) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டின் உள்புறம் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு உறங்கி உள்ளனர். வெளிப்புறம் மகன் மணிகண்டன் (31), மரு மகள் நிஷாந்தி ஆகியோர் உறங்கி உள்ளனர். நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக திறந்து வீட்டில் இருந்த சாம்சங் எல்.இ.டி. டி.வி. 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இன்று அதிகாலை நாராயணசாமி எழுந்து பார்க்கையில் கதவு திறந்தது உள்ளது டிவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசா ருக்கு தகவல்கொடுத்தார். தகவலின்பேரில் டி.எஸ்பி. காவியா நேரில் சென்று விசாரணை செய்தார். இதே போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே தெருவில் 4 செல்போன்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகு தியில் இது போல் திருடர்கள் நடைபெறுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×