search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளியை தாக்கிய தம்பி கைது
    X

    களக்காடு அருகே தொழிலாளியை தாக்கிய தம்பி கைது

    • சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தை விநாயகமூர்த்திக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், விநாயக மூர்த்தியை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கம்பத்து, ஜெக ஜீவன்புரத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவரது தந்தை சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தை விநாயகமூர்த்திக்கு எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கும், அவரது தம்பி கோவிந்தராஜ்க்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று கோவிந்த ராஜ், தந்தை சுப்பையாவிடம் சென்று மீண்டும் தகராறு செய்தார். இதைப்பார்த்த விநாயகமூர்த்தி தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், விநாயக மூர்த்தியை அவதூறாக பேசி தாக்கினார்.

    இதையடுத்து காய மடைந்த விநாயகமூர்த்தி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது பற்றி களக் காடு போலீ சில் புகார் செ ய்யப் பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோவிந்த ராஜை கைது செய்தார்.

    Next Story
    ×