search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    • 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி, அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்,
    • ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பாட்டி வீடு அதே ஊரில் உள்ள மற்றொரு வீதியில் உள்ளது. சிறுமி அடிக்கடி பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம், பாட்டி வீட்டின் அருகில் வசிப்பவர் ஆனந்தராஜ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. இவர் பாட்டி வீட்டிற்கு வரும் 13 வயது சிறுமியை அடிக்கடி அழைத்து நட்பாக பேசி வந்தார். 7 மாத கர்ப்பம் நாளடைவில் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அச்சிறுமி கருவுற்றார். தான் கருவுற்றதை கூட அறியாத அச்சிறுமி தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அச்சிறுமி மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர். சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி கொடுத்த தகவலி ன்படி, அவரது பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரட்டை பெண் குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள நபர், 13 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×