தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
ரத்ததான முகாம் நடந்தபோது எடுத்த படம்.
ரத்ததான முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர். சிவாகர் தலைமை தாங்கினார். வக்கீல் எம் சொக்கலிங்கம், தர்மகர்த்தாக்கள் சேகர்(என்ற) சந்திரசேகர் ரகுபதி என்ற சின்னராஜ் முன்னில வகித்தனர், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, காமராஜ் கல்லூரி வரலாற்று துறை தலைவர் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் கோகுல், லிங்க பிரதீஷ், சரத் சரவணன், ரத்தத்தான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ், செல்லத்துரை, சமூக வலைதள அணி பொறுப்பாளர் ராபர்ட் ஜெயம், சங்க சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்,

பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை நடைபெற்றது, இதில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்,முகாமை உப்பு உற்பத்தியாளர்கள் முகேஷ் சண்முகவேல், எல்.ஆர்.சிவகர்,மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ் எம் சகாயராஜ்,ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com