search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
    X

    கண்தான விழிப்புணர்வு பேரணி தொடங்கியபோது எடுத்த படம்.

    கோவில்பட்டியில் கண்தான விழிப்புணர்வு பேரணி

    • கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
    • கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    கோவில்பட்டி:

    இருவார தேசியக் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நாடெங்கும் நடைபெறுகிறது. இதன் ஒரு அங்கமாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணை ந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணியை கோவில்பட்டி, நேஷனல் எஞ்சினீயரிங் கல்லூரி டீன் பி.பரமசிவன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மீனாட்சி, கோவில்பட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஹரிணி கிருஷ்ணா, விநாயகா ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கண் தானம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முக வேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி, கோவில்பட்டி கண்தான இயக்க ஜெயராஜ், கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ஜோசப் அந்தோணிசாமி, நெல்லை அரவிந்த் கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×