என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
நெல்லை டவுனில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- பா.ஜனதா சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மழையிலும் பா.ஜ.க. வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நெல்லை:
நெல்லை டவுன் குளப்பிறை தெருவில் பா.ஜனதா சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டவுனில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்த முதியவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சந்திப்பு ஈரடுக்கு மேப்பால பராமரிப்பு பணியின் போது கல் விழுந்து காயமடைந்த வர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கி னார்.
பொதுச்செய லாளர்கள் வேல் ஆறுமுகம், டிவி சுரேஷ், முத்து பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத் தலைவர் முருகதாஸ், செயலாளர்கள் நாகராஜன், மாரியம்மாள், முத்தையா, மண்டல் தலைவர் இசக்கி அய்யப் பன், துணைத் தலைவர் மாரியப்பன், பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் தின் போது திடீர் மழை பெய்தது. அந்த மழையிலும் பா.ஜ.க. வினர் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






