5 பேர் பலியான இடத்தில் தடுப்பு வேலி அமைக்க பூமி பூஜை

தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் ஏற்பாடு ஆற்றில் உயிர்பலியை தடுக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
5 பேர் பலியான இடத்தில் தடுப்பு வேலி அமைக்க பூமி பூஜை
Published on

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அப்பகுதியை பார்வையிட்டார்.

ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படியும் நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

எஸ்டேட் மேலாளர், மற்றும் தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com