search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா
    X

    மாவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா

    • ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஊஞ்சபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு வேல் எடுத்து சென்று புனித நீராடி, தீர்த்து குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்கை கொண்டு மாவிளக்கு பூஜையும் செய்தனர். வானவேடிக்கை நடைபெற்றது. இரவு அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுகாலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊஞ்சப்பாளையம் ஊர் தர்மகர்த்தா முன்னிலையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×