என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நுண்ணுயிர் உரமானது மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமை ச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடியில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர் திருச்செல்வி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் குறித்து விளக்கி பேசுகையில்:-

    மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதிலிருந்து பெறப்படும் நுண்ணுயிர் உரமானது பொது மக்கள் பயன்பாட்டிற்கு மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர்கள் திருலோ கச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×