search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி  அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்
    X

    பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகி விஸ்வை ஆனந்தன் பேசிய போது எடுத்தபடம்.

    புளியங்குடி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

    • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டை முன்னேற்ற உதவும் சிறந்த பாதை கல்வி என்ற தலைப்பில் பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் விஸ்வை ஆனந்தன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது மாணவிகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும், செய்திகளை உள்ளார்ந்து உற்று நோக்கும் திறனை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்து பயிற்சியையும், ஏன் எப்படி என்ற சிந்தனை அனைத்திலும் புதுமையான முயற்சிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடையே அடிப்படை எண் மற்றும் எழுத்து அறிவை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மழலைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு பாலாம்பிகா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×