search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது அருந்துவோரை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி
    X

    மது அருந்துவோரை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி

    • 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என அறிவிப்பு

    சூலூர்,

    சூலூர் அருகே மது விலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இருகூர் பேரூராட்சி பகுதியில் 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஒண்டிப்புதூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரை சுத்திகரித்து குளங்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் திட்டத்தில் பட்டணம்புதூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 125 எச்பி மின் திறன் உள்ள மோட்டார்க்கு இலவச மின்சாரம் அளித்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    செட்டிபாளையம் அருகே உள்ள காடு குட்டைக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை கொண்டு செல்லும் குழாயை திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து செலக்கரிச்சல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து சுமார் 100 பயனாளிகளுக்கு 10 கிலோ விதம் அரிசி மூட்டைகள் வழங்கினார்.

    இதனை அடுத்து சுல்தான்பேட்டை அருகே வடவேடம்பட்டி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில் புதிதாக மது அருந்த வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு டாஸ்மாக் ஊழி யர்கள் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்தி னால் சன்மானம் வழங்கப்ப டும். முன் களப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஆலோசிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், சுல்தான்பேட்டை ஒன்றியகுழு துணைத் தலைவர் பாப்பம்பட்டி மனோகரன், கண்ணம்பா ளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜ கோபால், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார், கலங்கள் ஊராட்சி தலைவர் ரங்க நாதன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அவைத்த லைவர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழி ல்நுட்ப பிரிவு துணைச் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து மாணிக்கம், செலக்கரச்சல் கிளைச் செயலாளர் தேவராஜ், கலங்கள் கிளைச் செயலாளர் சிவக்குமார், கழிவுநீர் சுத்திகரிப்பு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சீனிவாசன், கண்ணம்பாளையம் நகர செயலாளர் விஸ்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜா வேலுச்சாமி, பாப்பம்பட்டி ராஜன், தொண்டரணி துணைத் தலைவர் ரமேஷ், ஆதி திராவிடர் நலப்பிரிவு மணி மோகன், வெங்கடேஷ் ஒன்றிய மாணவர் அணி, செலக்கரச்சல் ஆறு சாமி, குப்புசாமி, கோவிந்தராஜ் சிவக்குமார் உள்ளிட்டோர் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×