என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
நெல்லை:
புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது, தொழிலாளர்களை பாதிக்கின்ற ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், நலவாரிய நிதியில் இருந்து ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு ரூ.4 லட்சத்தில் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு நலவாரிய ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிரமாக வழங்கிட வேண்டும், ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், செல்வன் என்ற சற்குணம், அண்ணாதுரை, நகர செயலாளர் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் ராஜசேகரன், பீடி சங்க மாவட்ட தலைவர் சரவண பெருமாள், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்