search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலி
    X

    தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலி

    • பொன்னையா சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60)சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 10 மணி அளவில் ஸ்பிக் நகர் பஜார் வழியாக தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் பொன்னையா தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன ளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்,

    இது குறித்து முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு)மூக்கண் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×