search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து-வாலிபர் சாவு
    X

    நெல்லையில் மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து-வாலிபர் சாவு

    • மேகா என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
    • மணி என்பவர் ஆட்டோவில் டேனியல் உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் குறிச்சி வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் டேனியல் (வயது 28), மகள் ஜெயா (19).

    புதுமணத்தம்பதி

    அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முனியசாமி (22). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆகும். டேனியல், முனியசாமி உள்ளிட்டோர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லி ஆக்ரா பகுதியை சேர்ந்த மேகா (27) என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

    இதையடுத்து டெல்லியில் இருந்து அவர்கள் சென்னைக்கு ரெயிலில் வந்துள்ளனர். பின்னர் நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று அதிகாலை நெல்லைக்கு வந்தனர். அதன் பின்னர் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணி( 28) என்பவர் ஆட்டோவில் டேனியல், அவரது மனைவி மேகா, தங்கை ஜெயா, முனியசாமி உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.

    மாடு மீது ஆட்டோ மோதல்

    அப்போது பாளையங் கால்வாயை அடுத்த தனியார் விடுதி அருகே சாலையில் நடுவில் படுத்திருந்த மாடு மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முனியசாமி, டேனியல், ஜெயா, மேகா, மணிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×