என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்- 5 பேருக்கு வலைவீச்சு
    X

    களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்- 5 பேருக்கு வலைவீச்சு

    • போதையில் தகராறு செய்த முகேசை மதன் தட்டிக்கேட்டுள்ளார்.
    • காயமடைந்த மதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 21). கடந்த சில நாட்களுக்கு முன் மலையடியில் உள்ள இவரது நண்பர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட அதே ஊரை சேர்ந்த முகேஷ் (25) மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்தாராம். இதனை மதன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மதன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ், ரமேஷ் (25), ஹரி (19), குமார் (27), முனியாண்டி (52) ஆகியோர் சேர்ந்து மதனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் காயமடைந்த மதன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×