search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வாலிபர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
    X

    நெல்லையில் வாலிபர் மீது தாக்குதல் - 2 பேர் கைது

    • அர்சத் முகைதீன் டவுன் எஸ்.என். நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கார்த்திக், நவீன் ஆகியோர் மோட்டார் சைக்கிளின் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லையை சேர்ந்தவர் அர்சத் முகைதீன் (வயது 25). இவருக்கும், திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த இசக்கி கார்த்திக் (28) மற்றும் பாளையஞ்செட்டிகுளம் நவீன் (22) என்பவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அர்சத் முகைதீன் டவுன் எஸ்.என். நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி கார்த்திக் மற்றும் நவீன் ஆகியோர் அவரை வழிமறித்து தாக்கி, மோட்டார் சைக்கிளின் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

    Next Story
    ×