என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மீது தாக்குதல்
    X

    வாலிபர் மீது தாக்குதல்

    • இசக்கிபாண்டிக்கும், இசக்கி துரைக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • ஆத்திரம் அடைந்த இசக்கி துரை, இசக்கி பாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பி தலைவன்பட்டயம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 32).

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கி துரைக்கும் (39) தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இசக்கிபாண்டி அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி துரைக்கும் அவரு க்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி துரை, இசக்கி பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப் படுகிறது. இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக இசக்கி துரையை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×