search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்
    X

    நாங்குநேரி அருகே வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்

    • பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர்.
    • காயம் அடைந்த செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் ஏழாங்கால், மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி செல்வி (வயது62). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் பிரவு, அவரது மனைவி ரம்யாவிற்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து செல்வி வீட்டில் இருக்கும் போது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக பிரபு, அவரது மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×