search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தாய்- மகன்கள் மீது தாக்குதல்
    X

    களக்காடு அருகே தாய்- மகன்கள் மீது தாக்குதல்

    • முத்து உள்பட 9 பேர் கும்பல் ரமேஷ், அவரது சகோதரர், தாயார் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
    • தாக்குதலின்போது ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ரமேஷ் (வயது 25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த இசக்கியப்பன், அக்பர், தமிழன், முத்து உள்பட 9 பேர் கும்பல் திடீர் என வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, ரமேஷ் அவரது 17 வயது சகோதரர், அவரது தாயார் தங்கம்மாள் (44) ஆகிய 3 பேரையும் தாக்கினர். மேலும் ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கியப்பன் உள்பட 9 பேர் கும்பலையும் தேடி வருகிறார்.

    Next Story
    ×