என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி அருகே விவசாயி மீது தாக்குதல்
- சுகானந்தலிங்கம் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
- தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள கீழகட்டளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுகானந்தலிங்கம், விவசாயி. இவர் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி ஊழியர்கள் மதிப்பீடு தயார் செய்ய வீட்டை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்ராஜா, சுகானந்தலிங்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷ்ராஜாவை தேடி வருகின்றனர்.
Next Story






