என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்
- தேவேந்திரன் நேற்று மாவடியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
- காயமடைந்த தேவேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி நடுத்தெருவை சேர்ந்த வர் தேவேந்திரன் (வயது53). விவசாயி. இவரு க்கும், கொய்யா மாவடியை சேர்ந்த கண்ணன் (32), டார்வின் (32) ஆகி யோர் களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தேவேந்திரன் நேற்று மாவடியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த கண்ணன், டார்வின் ஆகியோர் தேவேந்திரனை அவதூறாக பேசி, தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக கண்ணன், டார்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story






