search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடி அருகே இளம்பெண் மீது தாக்குதல்- கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
    X

    திருக்குறுங்குடி அருகே இளம்பெண் மீது தாக்குதல்- கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

    • முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார்.
    • காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள தளவாய்புரம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 30). இவரது மனைவி சீதாலெட்சுமி (26). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து முத்துகிருஷ்ணனின் தாயார் லெட்சுமி, சகோதரர் செல்வம், செல்வத்தின் மனைவி உமா ஆகியோரது தூண்டுதலின் பேரில் முத்துகிருஷ்ணன், சீதாலெட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக சீதா லெட்சுமியின் கணவர் முத்து கிருஷ்ணன், மாமியார் லெட்சுமி, செல்வம், உமா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×