search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தில்லைவிளாகத்தில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்
    X

    தில்லைவிளாகத்தில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்

    • தில்லைவிளாகம் ரெயில் நிலையம் அருகில் 30- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
    • வேலைக்கு செல்வோருர்கள் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை செயற்குழு கூட்டம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், தில்லைவிளாகம் இரயில் நிலையம் அருகாமையில் உதயமார்தாண்டபுரம், பின்னத்தூர், எடையூர் , தேவதானம், புத்தகரம் தோலி, தில்லைவிளாகம் இடும்பாவனம் என 8-க்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் 30- க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களும் அமைந்துள்ளது.

    வேலைக்கு செல்வோருக்கும் மேற்படிப்பிற்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கும் விவசாயிகள் வியாபாரிகள் மருத்துவ தேவைக்கு பெருநகரங்களுக்கு செல்லவதற்கும் பேருந்து போக்குவரத்து பயன்படுத்துவதால் பெரும் பொருளாதாரத்தை செலவு வேண்டி உள்ளது.

    இதனால் தில்லைவிளாகம் மார்க்கம் வழியாக செல்லும் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில் , செகேந்திரபாத் விரைவு இரயில் உள்பட இந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துனைதலைவர் அஸாருதீன், கிளை பொருளாளர் கமருதீன், அமிரக பொறுப்பாளர் மீரான் உசேன், பரக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×