search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சில்வர் பீச் கடற்கரையில்கடலில் இறங்க முயன்ற சிறுவனை மீட்ட நரிக்குறவர்கள்
    X

    சில்வர் பீச் கடற்கரையில்கடலில் இறங்க முயன்ற சிறுவனை மீட்ட நரிக்குறவர்கள்

    சிறுவனின் தந்தை ஏற்க னவே இறந்து விட்டார். இந்நிலையில் அந்த சிறுவனை அவரது தாயார் அடிக்கடி ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று நள்ளிரவு சிறுவன் ஒருவன் கடலுக்குள் இறங்க முயற்சித்துள்ளான். இதை பார்த்த அங்கு இருந்த நரிக்குறவர்கள் பார்த்து அந்த சிறுவனைபிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை யிலான போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    அவன் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோ ட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் என்பதும் 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த சிறுவன் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று தனது தாயார் பணம் வாங்கி வர சொன்னதாக கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு பண்ருட்டி யில் இருந்து கடலூர் பஸ் நிலையம் வந்துள்ளான். பின்னர் அங்குள்ள கடை யில் எலி மருந்து கேட்டுள்ளான். அந்த கடையில் இல்லை என்று சொன்ன தால், மீண்டும் பஸ் ஏறி தேவனாம்பட்டி னம் சில்வர் கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள வர்கள் பிடித்து போலீசி டம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    மேலும் மாணவனின் தாயாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அந்த மாணவன் தாயாரை பார்த்ததும் அவரிடம் செல்லாமல் அழுதுள்ளான். பின்னர் குழந்தைகள் பாது காப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் தனது தாயாருடன் செல்வ தாக கூறியுள்ளான். இதன் பின்னர் சிறுவனின் தாயா ருக்கும் அறிவுரை கூறி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது0

    Next Story
    ×