search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஜோதிடர் சாவு
    X

    நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஜோதிடர் சாவு

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது.
    • இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). ஜோதிடர். இவர் நேற்று வீட்டி லிருந்து அவரது தாயார் பாக்கியத்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் அருகே உள்ள பாச்சலுக்கு சென்றார். அங்கு அவரது தாயாரை விட்டுவிட்டு நேற்று இரவு மங்களபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ராசிபுரத்தில் இருந்து திரும்பினார். அவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது. இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த சிவகுமாருக்கு நந்தினி (25) என்ற மனைவியும் ருத்ரா, ஸ்ரீ சுபா என்ற 2 மகள்களும் உள்ளனர். சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×