ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் கொடை விழா - யாக பூஜையுடன் தொடங்கியது

ஆறுமுகநேரியில் லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து வில்லிசையும், சுப்பிரமணியராக காட்சியளித்த அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா நேற்று தொடங்கியது. அதிகாலையில் மகா கணபதி ஹோமம் மற்றும் யாகபூஜை நடந்தன.தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சோ.வெங்கடேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் வில்லி சையும், சுப்பிர மணியராக காட்சியளித்த அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 2-வது நாளான இன்று இரவு அம்பாள், ஸ்ரீ கிருஷ்ண ராக காட்சி அளித்தல், 3-வது நாள் மகாலட்சுமியாக காட்சி அருளுதல் நடக்கிறது. 4-வது நாளாள (திங்கள்கிழமை) மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதலும், இரவில் சரஸ்வதியாக காட்சி அருளுதல், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 5-வது நாள் (செவ்வாய் கிழமை) மதியம் மஞ்சள் நீராடி ஆற்றுக்கு செல்லு தலும், இரவில் சிறுவர், சிறுமியர் ஆயிரங்கண்பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கின்றன.பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

6-வது நாளான (புதன்கிழமை) மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெறுகிறது.நிறைவு நாளான வியாழக்கிழமை அன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், தொடர்ந்து அன்ன தானமும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டியன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com