search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையில் சென்ற வாகனங்கள் பறிமுதல்
    X

    ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையில் சென்ற வாகனங்கள் பறிமுதல்

    • இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
    • மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

    இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பெயரில்துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் தலைமையிலான காவல் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் தீவிர இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×