என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் பிடிக்க சென்றபோது தகராறு; 4 பேர் மீது வழக்குப்பதிவு
- சந்திரா தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார்.
- அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39) இவர் சம்பவத்தன்று நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story