என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? -கலெக்டர் ஆய்வு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? -கலெக்டர் ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/09/1759211-9.jpg)
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? -கலெக்டர் ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
பட்டுக்கோட்டை வருவாய் கோ ட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது .
மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், தாசில்தார் ராமச்சந்திரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சங்கர், துணைத் தலைவர் முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)