search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது.

    கராத்தே சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    • நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    களக்காடு:

    நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கினார். ஒய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை, திமுக நகர செயலாளர் மணிசூரியன், வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். யூசுப் அலி வரவேற்றார்.

    இதில் மீரானியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பீர்முகம்மது, செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி தலைவர் தமிழ்செல்வன், ஏர்வாடி மாடன் ஸ்கூல் தாளாளர் ஹாஜாமுகைதீன், சிங்கம்பத்து இமாம் யூசுப், நகர திமுக துணை செயலாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினர்.

    மேலப்பாளையம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜமால் முகம்மது நன்றி கூறினார்.

    Next Story
    ×