என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- நாகையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் உத்தரவின் பேரில், தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஶ்ரீ வழிகாட்டுதலின் அடிப்படையில், தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியைப் தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வடுகநாதன் (பொறுப்பு) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தப்படி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி தலைஞாயிறின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியில் நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, நாகராஜன், வினோத், வீரன், விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்பு புகையிலை தீமை குறித்து சுகாதார ஆய்வாளர் நாகை செல்வம் எடுத்து கூறினார்.






