என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்
- பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
- களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகம், களக்காடு சூழல் திட்ட வனசரகம் சார்பில் களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதன் தொடக்க விழா களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.
சூழல் திட்ட வனவர் சிவக்குமார் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் கொடி அசைத்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இதில் உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) வினோத்ராஜ், சதிஸ் குமார், அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் மதிவாணன், லதா மதிவாணன், களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, வனசரகர் பிரபாகரன், வனவர் அப்துல்ரஹ்மான், கலுங்கடி கிராம வனக்குழு தலைவர் ஆனந்தராஜ், மிதார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் வன காப்பாளர் அபர்ணா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்