என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    பேரூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போதை ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
    • உடல் நலனை கெடுத்துக் கொள்வதோடு, சுற்று வட்டார சமூகத்திற்கும் கேடு விளைவிக்கின்றனர்.

    பேரூர்,

    இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் ஏ.சதானந்தம் தலைமை தாங்கினார். இதில், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கலந்து கொண்டு பேசும்போது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போதை ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்ற வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தங்களது உடல் நலனை கெடுத்துக் கொள்வதோடு, சுற்று வட்டார சமூகத்திற்கும் கேடு விளைவிக்கின்றனர். இறுதியில், மாணவர்கள் மனநோயாளியாக மாறிவிடும் நிலையும் உள்ளது.

    எனவே, ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து, நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுத் தர வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து, போலீசுக்கு தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். சமூக நலனைக் கருத்தில் கொண்டு, போதை பொருட்கள் பயன்பாடு குறித்து, போதை பொருட்கள் விற்பவர்கள் குறித்து, எந்த வித தயக்கமும் இன்றி போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என்றார்.

    தொடர்ந்து, ஊராட்சித் தலைவர் சதானந்தம் பேசும்போது போதைப் பொருட்கள் புழக்கத்தால், இளைஞர்களின் எதிர்காலமே பாழாகிவிடும். எனவே, நமது சமூகத்தின் நலன் கருதி, போதைப் பொருட்களின் ஒழிப்பு நடவடிக்கைக்கு, ஊராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். இதில் துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×