search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி பேசிய போது எடுத்த படம்

    சங்கரன்கோவில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

    • சங்கரன்கோவில் சட்டமன்ற அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, இலக்கிய அணி துணைச் செயலாளர் சின்னப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், சங்கரன் கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, லட்சுமணன், ராமசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணி டேனியல், டாக்டர் திலீபன், வழக்கறிஞர் காந்திகுமார், நகர் மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், முத்துலட்சுமி, மாரிச்சாமி, ராமதுரை, நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் குருசாமி, மாரிச்சாமி, அந்தோணி, ராஜ்குமார், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×