என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தைக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி விட்டு தற்கொலை செய்த  என்ஜினீயர்
    X

    தந்தைக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி விட்டு தற்கொலை செய்த என்ஜினீயர்

    • கோவாவுக்கு செல்ல தந்தை பணம் தராததால் ஆத்திரம்
    • பால்கனி விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள மேட்டாங்காடு நகராஜா நகரை சேர்ந்தவர் இஜாஸ் அகமது. இவரது மகன் சஜ்ஜத் கல்பான் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சஜ்ஜத்கல்பானுக்கு அவரது பெற்றோர் பூமார்க் கெட்டை சேர்ந்த பலக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இந்தநிலையில் மாமனார், மாமியாருடன் ஒத்து போகாததால் பலக் தனது கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் பெற்றோர் கத்தார் நாட்டில் வசித்து வரும் மகள் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பலக் கோவாவிற்கு சென்றார்.

    மனைவி பிரிந்து சென்றதால் சஜ்ஜத்கல்பான் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். அவர் கோவாவுக்கு சென்று மனைவியை பார்க்க முடிவு செய்தார். அதன்படி சஜ்ஜத்கல்பான் கோவாவுக்கு செல்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை.

    இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலை செய்ய போவ தாக சேலையை பால்கனியில் உள்ள தடுப்பு கம்பியில் கட்டி புகைப்படம் எடுத்து அவரது தந்தைக்கு அனுப்பி னார். பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சஜ்ஜத்கல்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×