search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு
    X

    விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு

    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள பெரும்புலிபாக்கம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இதில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக இவர்கள் பெங்களூர் அனுப்பப்பட்ட நிலையில் விபத்தான ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஆம்புலன்ஸ் முன் பகுதி வெடித்து சிதறி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அனைத்து ஆம்புலன்சை சாலை ஓரம் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×