search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி-தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்
    X

    கபடி வீரர்களை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தபோது எடுத்த படம்.

    திசையன்விளையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி-தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார்.
    • ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்- பெண் மின்னொளி கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது.

    போட்டி தொடக்கம்

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து விளையாட்டு, வீரர்களை ஆர்.எஸ்.பாரதிக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

    ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது. இதில் அரியானா அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர் அணியும் விளையாடியது இதில் அரியானா அணி வெற்றிபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    போட்டி தொடக்க விழாவில் ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ் தங்கையா கணேசன், ஜி.பி.எம்.குமார், நவ்வலடி சரவணகுமார், அப்புவிளை மகேஷ்வரன், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து கபடி வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    Next Story
    ×