search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அ.தி.மு.க. அறிவிப்பு
    X

    அதிமுக தலைமையகம்

    தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அ.தி.மு.க. அறிவிப்பு

    • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
    • அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×