என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேசிய காட்சி.

    தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு

    • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.பொதுக் கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் எம்.ஜி.ஆர். பூங்கா எதிரே நேற்று நடைபெற்றது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்க ளின் சாராம்சங்களை விளக்கி பேசும் பொதுக் கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் எம்.ஜி.ஆர். பூங்கா எதிரே நேற்று நடை பெற்றது.

    கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சேவியர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்க ட்சி கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச் செல்வன், சுடலை மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பி னர் எஸ்.கே. மாரி யப்பன் ஆகி யோர் முன்னி லை வகித்த னர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலை வரும்,முன்னாள் மா வட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதா கர் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். தமிழ கத்தின் பல்வேறு உரிமைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்திலே பறிபோனது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழிப்பேன் என்று சொன்ன முதல்-அமைச்சர் ஸ்டாலினால் நீட் தேர்வை ஒழிக்க முடிய வில்லை. தமிழகத்தின் உரி மைகள் காக்கப்பட மீண்டும் அ.தி. மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தலைமை நிலைய பேச்சா ளர்கள் குமுதா பெருமாள், நடராஜன் என்ற குறிச்சி சேகர், மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற் கடல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், பிரபாகர், சுதர்சன் ராஜா, முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாநகராட்சி கவு ன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், வக்கீல்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, மனுவேல் ராஜ், ஐடியல் பரமசிவம், கே.டி.சி. ஆறுமுகம், லெட்சுமணன், எம்பெருமாள், பிராங்கிளின் ஜோஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், தலைமை நிலைய பேச்சாளர் முருகா னந்தம், ஜான்சன் தேவராஜ், சுரேஷ், முத்துகிருஷ்ணன், மைதீன், வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், ஆத்திகண், அண்ணா தொழிற்சங்கம் ஜவகர், ரெயில்வே மாரியப்பன், ஆழ்வாரப்பன், மாவட்ட பிரதிநிதி விஜயன், ஹார்பர் பாண்டி, பிரபாகரன், வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், பொருளாளர் சுகுமார், ஆனந்த ராஜ், வட்ட செய லாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வட்ட செய லாளருமான மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×