என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.குமரவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்-கைது
- எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- கே.இராமதாஸ் தலைமையில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க. அரசை கண்டித்தும் சபாநாயகரை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் செய்தார். அவரை கைது செய்ததை கண்டித்து உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில்க ள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் இரா குமரகுரு தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் உளுந்தூ ர்பேட்டை ஒன்றிய செயலாளர் மணிராஜ், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை, திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செண்பக வேல் என 500க்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கூடிய அதிமுகவினர் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எல்.கே.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மிட்டாமண்டகப்பட்டு கூட்ரோட்டில் அ.தி.மு.க.வினர் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.இராமதாஸ் தலைமையில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
செயலாளர் பாபு தலை மையில் அ.தி.மு.க. வினர் மறியல் செய்தனர். இதில் பேரவை மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், நகரத் தலைவர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் பாஷியம், குறிஞ்சிப்பாடி பேரூர்செய லாளர் ஆனந்த பாஸ்கர், உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். இவர்களை போலீசார் கைதுசெய்தனர்.