search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைக்கொல்லை   அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
    X

    தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் .

    வாழைக்கொல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

    • வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன
    • இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கருணாகரன், அன்பகம், , வள்ளி, கீதா கிருத்திகா ஆகியோர் தமிழக அரசின் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் , தொடக்கக் கல்வி,மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வாழைக்கொல்லை குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மாணவர்களின் இல்லங்களிலேயே மாணவர்கள் சேர்க்கையை செய்தனர். இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

    Next Story
    ×