search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை- அமைச்சர் பேட்டி
    X

    பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரண உதவிகளை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சி.வி. கணேசன் வழங்கினர்.

    கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை- அமைச்சர் பேட்டி

    • மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்து 700-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கினர்.

    அப்போது, அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்றுஇடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

    தொடர்ந்து முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்கு வதற்காக செய்யப்பட்ட உணவுகளை தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது, மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எஸ்.பி. நிஷா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×