search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுகள் மீது ஆசிட் வீச்சு-நர்சரி உரிமையாளர் மகன் உள்பட 2 பேர் தலைமறைவு
    X

    மாடுகள் மீது ஆசிட் வீச்சு-நர்சரி உரிமையாளர் மகன் உள்பட 2 பேர் தலைமறைவு

    • கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.
    • தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு ெரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 39). விவசாயி. இவரது தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற வந்த 25-க்கும் மேற்பட்ட எருமை, மாடுகளுக்கு கொப்புளங்கள் ஏற்பட்டது.

    முதலில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளதாக ராஜ்குமார் 4 நாட்கள் கழித்து எருமைகள் மீது இருந்த கொப்புளங்களில் சீல் வடிந்து தோல் உரிய ஆரம்பிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு சில மாடுகள் மீது அதன் சதைகளை தொங்கும் நிலையில் காணப்பட்டன. பாதிக்கப்பட்ட சில எருமை கள் வயிற்றில் குட்டியுடனும், பால்கறக்கும் தன்மையுடன் இருக்கின்றன.

    இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்து ஆய்வு செய்தனர். அதில் கால்நடைகள் மீது ஆசிட் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜ் குமார் மேட்டுப் பாளையம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் நர்சரி உரிமையாளர் மகன் ரவிச்சந்திரன், ஊழியர் மணிகண்டன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

    இது தொடர்பாக மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தலை மறைவாகி உள்ள ரவிச் சந்திரன், மணி கண்டன் ஆகியோர் தேடி வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் கூறுகையில் ஏற்கனவே பழத்தோட்டம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.

    ஆனால் இந்த முறை கால்நடைகள் மீது ஆசிட் வீசி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×