என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு விழா
- அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.
- பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக ஆனி மாதம் நடைபெறும் திரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்க நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த விழாவிற்கான தொடக்கமாக பந்தல்கால் நடும் விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேகமும், அதனைத்தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி முன்செல்ல அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வர கோவில் மகா மண்டபத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பந்தல் காலை சுமந்து செல்ல, சுவாமி சன்னதி கோவில் வாசல் மண்டபத்தில் பந்தல் கால் நடப்பட்டது.
இந்த விழாவை தொடர்ந்து ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் அப்பர் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகிறது.
வருகிற ஜூலை மாதம் நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மொத்தம் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தல்கால் நடும் விழாவில் இன்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்