search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
    X

    திருவாரூர் பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

    • தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    திருவாரூர்:

    ஆடி கடைசி வெள்ளி கிழமையை யொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல், திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அப்போது பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×