search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கைது
    X

    சங்கரன்கோவில் அருகே போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கைது

    • சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள ஆலடிப் பட்டியை சேர்ந்தவர் ராமர், விவசாயி.
    • கணேசை அவதூறாக பேசிய காளிராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள ஆலடிப் பட்டியை சேர்ந்தவர் ராமர், விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் (வயது28) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளிராஜ், ராமரை தாக்கி உள்ளார்.இது தொடர்பாக தகவலறிந்த சங்கரன்கோவில் போலீஸ் ஏட்டு கணேஷ், காவலர் மணிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு காளிராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசை அவதூறாக பேசிய காளிராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாக ஏட்டு கணேஷ் சங்கரன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×