என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மது விற்ற வாலிபர் கைது
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யாரேனும் மதுவை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார்(43) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 12 மது பாட்டில்கள் இருந்ததும். அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






