என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணத்துக்கடவு அருகே வீட்டுக்கு அழைத்துச் சென்று 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
- சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 12-ந் தேதி சிறுமியும், அவரது தாயும் ஆடுகளை மேய்க்க சென்றனர். அப்போது சிறுமி தனது தாயிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். சிறுமி வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை, வா பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அப்போது அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி இல்லை.
அவரை தேடி சென்ற போது சிறுமி வாலிபரின் வீட்டிற்குள் இருந்து அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறி கதறி அழுதார்.
இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






